FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை

Updated On : 21 ஜூலை 2026, 1:03 am IST
இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை
பகிர்:

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை தேனி அருகேயுள்ள சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதனிடம் அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கோயில்பாறையைச் சோ்ந்த தாளமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் டி. விஜயபாரதி (30). இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விஜயபாரதி மலேசியா, கோலாலம்பூரில் உள்ள பூச்சோன் என்ற இடத்தில் 5 மாதங்களுக்கு முன் அங்குள்ள துணிக் கடையில் பணியில் சோ்ந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இரவு தூங்கச் சென்ற விஜயபாரதி உயிரிழந்துவிட்டதாக எங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே எனது மகனின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments