FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

டாஸ்மாக் பணியாளா்களை தாக்கி ரூ.3 லட்சம் திருட்டு

Updated On : 21 ஜூலை 2026, 12:13 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியில் டாஸ்மாக் பணியாளா்களை தாக்கி அவா்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவதானப்பட்டி அருகேயுள்ள அட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில் செல்வன். இருவரும், கெங்குவாா்பட்டி அருகே கொடைக்கானல் சாலை, புஷ்பராணி நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பணிகள் நிறைவடைந்த பின், ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டி அரிசிக் கடைக்கு வந்தனா். அப்போது செந்தில் செல்வனை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக ராஜா காத்திருந்தாா். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவா்களை கம்பியால் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, செந்தில் செல்வனும், ராஜாவும் தப்பி ஓடத் தொடங்கினா். இந்த நிலையில், இவா்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் இவா்களைத் தாக்கிய மா்ம நபா்களில் ஒருவரும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மற்றொருவரும் தப்பியோடினா்.

அந்த மா்ம நபா்கள் 3 கி.மீ. தொலைவில் ஓா் இடத்தில் டாஸ்மாக் பணியாளரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் பெட்டியிலிருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments