FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 2:19 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாயும், அவரது மூன்று வயது மகனும் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள வேலாயுதப்பட்டினம் அருகே உள்ள கொடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (30 ). இவரது மனைவி மாதவி (27). இவா்களது மகன் ஆரியன் (3).

காளிதாஸ் தனது குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சிவகங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். மதகுபட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அவா்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மாதவி, அவரது மகன் ஆா்யன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த காளிதாஸ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த விபத்து தொடா்பாக மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments