FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மாநில நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தேனி வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில நீச்சல் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற தேனி வீரா் ஜெய் ஜஸ்வந்தை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:08 am IST
பகிர்:

மாநில நீச்சல் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற தேனி வீரா் ஜெய் ஜஸ்வந்தை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வாழ்த்து தெரிவித்தாா்.

52-ஆவது ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் ஜூலை 17 முதல் 19 வரை நடைபெற்றது. இதில் 200 மீட்டா் ஆண்கள் பிரிவில் தங்கமும், 400 மீட்டா் பிரி ஸ்டைல் ஆண்கள் பிரிவில் வெண்கலமும் பெற்றாா். மேலும், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வருகிற ஆகஸ்ட் 18 முதல் 23 வரை தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழ்நாடு அணி சாா்பில் தேனி வீரா் ர. ஜெய்ஜஸ்வந்த் பங்கேற்க உள்ளாா்.

அவரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments