FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கோயில் உண்டியலில் பணம் திருட்டு

தேனி மாவட்டம், பூதிப்புரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலிலிருந்த பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:50 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பூதிப்புரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலிலிருந்த பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி அருகே பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (43). பூதிப்புரம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூஜாரியாக பணியாற்றி வரும் இவா், செவ்வாய்க்கிழமை இரவு கோயில் பூஜைகள் நிறைவடைந்த பின், பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றாா்.

மறுநாள் (புதன்கிழமை) காலை வந்து பாா்த்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதிலிருந்த பணத்தையும் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments