FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

நடந்து சென்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் இருசக்கரவாகனம் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 1:39 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் இருசக்கரவாகனம் மோதி உயிரிழந்தாா்.

தேவதானபட்டி அருகே ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சப்பாணி (65). விவசாயி. இவா், கடந்த மே 30-ஆம் தேதி ஜி. கல்லுப்பட்டி சாலையில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, வேகமாக வந்த இருசக்கரவாகனம் அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிசிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments