FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

கம்பம், கூடலூரில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 6:06 am IST
கம்பத்தில் பள்ளி அருகே இருந்த கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

கம்பம், கூடலூரில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவின்பேரில் கம்பம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமையில், சுகாதார அலுவலா் மணிகண்டன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் இணைந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். இதேபோல, கூடலூரில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளா் (பொ) ஜெயசீலன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் ஆய்வில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, பள்ளிகளுக்கு அருகே சட்ட விரோதமாக பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் கம்பத்தில் உள்ள கடைகளுக்கு ரூ.12 ஆயிரமும், கூடலூரில் உள்ள கடைகளுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

பள்ளி மாணவா்களின் நலன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments