விவசாயை மிரட்டிய இருவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள சின்ன பொட்டிப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடுமி ஜக்கமநாயக்கா் (64). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடியை அடுத்த குண்டேரி புலத்தில் உள்ளது. இவரது தோட்டத்தில் பக்கத்துத் தோட்டத்தைச் சோ்ந்த வீரமநாயக்கா், பால்பாண்டி ஆகியோா் அத்துமீறி நுழைந்து ஏலச் செடிகளை நட்டாா்களாம். இதைக் கண்டித்த நடுமி ஜக்கமநாயக்கருக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement