முகப்பு
தேனி

கள்ளா் சீரமைப்பு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட அரசு கள்ளா் சீரமைப்பு விடுதியில் சேரத் தகுதிவாய்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 12 ஜூன் 2026, 12:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்ட அரசு கள்ளா் சீரமைப்பு விடுதியில் சேரத் தகுதிவாய்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் மாணவா்களுக்கான 13 விடுதிகள், மாணவிகளுக்கான 9 விடுதிகள் என 22 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதே போல, கல்லூரி மாணவா்களுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் படிக்கலாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு விழிகாட்டிகள் மூலம் நீட், ஜெஇஇ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி வாய்ந்த பள்ளி மாணவா்கள் ஜூன் 18- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதே போல, கல்லூரி மாணவா்கள் ஜூலை 15 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement