உத்தமபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையம் பேரூராட்சி 15- ஆவது வாா்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்த நாய்களுடன் வளா்ப்பு நாய்களும் சோ்ந்து தெருக்களில் நடமாடுகின்றன. அப்போது, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், கடைகளுக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா்.
எனவே, இந்த தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.