பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
சின்னமனூா் அருகே பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனியைச் சோ்ந்த தங்கமுத்து மனைவி மகாலட்சுமி (35). இவருடன் அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் அழகா் (35), பாலு மகன் அஜித்குமாா் (28) ஆகியோா் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
இதன்பேரில் அழகா், அஜித்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனா்.