முகப்பு
தேனி

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

Updated On : 1 ஜூன் 2026, 12:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போடி அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அவரிடம் மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவா் போடி ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (40) என்பதும், சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.