சாத்தூரில் அமமுக ஆலோசனைக் கூட்டம்
சாத்தூரில் புதன்கிழமை இரவு வடக்கு ரதவீதியில் உள்ள தேவர் மஹாலில் அமமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் புதன்கிழமை இரவு வடக்கு ரதவீதியில் உள்ள தேவர் மஹாலில் அமமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் 2019 மக்களவை தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் மாணிக்கராஜா மற்றும் அமைப்புச் செயலாளர் ஆதித்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மேலும் இக் கூட்டத்தில் இளைஞர் பாசறை துணைச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், நகர்ச் செயலாளர் ஜீ.ஆர்.முருகன், ஜெ பேரவை செயலாளர் வேல்சோலைராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்ளிட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.