மதுபோதையில் தவறி கீழே விழுந்து கூலித் தொழிலாளி சாவு
சிவகாசி அருகே புதன்கிழமை மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
சிவகாசி அருகே புதன்கிழமை மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
செங்கமலநாட்சியாபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் மதுபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.
விசாரணையில், அவர், எம்.புதுப்பட்டி அருகே உள்ள தேவர்சாலை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் தங்கப்பாண்டி (45) எனவும், இவர் கூலித் தொழிலாளி எனவும், இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு எனவும் தெரியவந்தது. திருத்தங்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.