முனியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா
ராஜபாளையம் ஆவரம்பட்டி முனியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரகம்,
ராஜபாளையம் ஆவரம்பட்டி முனியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரகம், முளைப்பாரி எடுத்து வந்தனர். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு முளைப்பாரி அலங்காரத்தில் அம்மன் மற்றும் வைரவன் சுவாமி ஆகியோர் முக்கிய தெருக்களில் வீதி உலா வந்தனர். இரவு அழகுத்தேவன் சாலையில் உள்ள மன்னார்குளத்தில் அம்மன் சிலை கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தலைமையில் பூசாரி சுப்பையா செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.