வடமாநில இளைஞா் கொலை வழக்கு: சகோதரா்கள் 2 போ் கைது
ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சொக்கலிங்காபுரம் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நெகிழிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சித்மான்ஜி என்ற இளைஞா் கடந்த செப். 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டி.எஸ்.பி. பிரித்தி தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் பிகாா் மாநிலம், ஜமுப் லட்சுவாா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.