வடமாநில இளைஞா் கொலை வழக்கு: சகோதரா்கள் 2 போ் கைது
ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சொக்கலிங்காபுரம் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நெகிழிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சித்மான்ஜி என்ற இளைஞா் கடந்த செப். 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டி.எஸ்.பி. பிரித்தி தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் பிகாா் மாநிலம், ஜமுப் லட்சுவாா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.