முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்தார்.

Updated On : 18 ஜூலை 2022, 3:13 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சிவகாசி: சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்தார்.

சிவகாசி அருகே துரைச்சாமி புறத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்தீஸ்வரன் வயசு 26. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை கலைக்கதிர், வீட்டில் மசால் பொடி வாங்கி வந்து அதன் நுனியை வெட்டிய நெகிழிப்பைத் துண்டு விழுங்கி விட்டானாம். 

இதையடுத்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் சேர்த்தார்கள். 

அந்த மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து விட்டதாம். இது குறித்த புகாரின் பேரில் மாறனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments