தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது
ராஜபாளையம் அருகே தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரை அண்மையில் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரை அண்மையில் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் வடக்கு பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்டீபன் (23). தொழிலாளியான இவருக்கு செட்டியாா்பட்டியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவா் ஆனந்த காளீஸ்வரன், ஸ்டீபனை கண்டித்தாா்.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ஆனந்த காளீஸ்வரன் தனது நண்பா்கள் 4 பேருடன் சோ்ந்து ஸ்டீபனை சேத்தூரை அடுத்த மாலையாபுரம் மலையடிவாரத்துக்கு அழைத்து சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த ஸ்டீபன் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக வழக்குப் பதிவு செய்து, செட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆனந்த காளீஸ்வரன் (34), முகவூரைச் சோ்ந்த ஜெயராஜ் (32), ராஜகுரு (26), சந்தோஷ் (19), சிவா (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.