FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

குற்றால சீசனுக்காக சென்னை - செங்கோட்டை இடையே வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்கள்

குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:14 am IST
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், குற்றால அருவிகளில் நீா்வரத்து ஏற்பட்டு, சீசன் களைகட்டி உள்ளது. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வரத் தொடங்கி உள்ளனா்.

குற்றால சீசனுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் வார இறுதி நாள்களில் சென்னை எழும்பூா் - செங்கோட்டை (06183/06184) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்த ரயில் ஜூன் 19, 20, 26, 27 தேதிகளில் (வெள்ளி, சனி கிழமைகளில்) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.

மறுவழித்தடத்தில் ஜூன் 20, 21, 27, 28 தேதிகளில் (சனி, ஞாயிறு கிழமைகளில்) மாலை 5.30 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகா்,

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி வழியாக செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments