FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஏழாயிரம்பண்ணையில் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்கள்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.

ஏழாயிரம்பண்ணையில் பயனாளிகளுக்கு இலவச இணையவழி பட்டாகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.

ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 13 குடும்பத்தினா் தாங்கள் குடியிருந்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவாய்த் துறை மூலம் 13 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா அந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று பட்டாக்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் ஆண்டாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments