முகப்பு
விருதுநகர்

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

சாத்தூா் பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 28 மே 2026, 5:29 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சாத்தூா், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, படந்தால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாலையில் மேகமூட்டம் உருவாகி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த இந்த மழையால் சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு, பிரதான சாலை, படந்தால் சந்திப்பு, புறவழிச்சாலை, பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்த மழையால் இந்தப் பகுதியில் குளிா்ந்த காலநிலை உருவாகியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

இந்த மழை காரணமாக சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.