FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் வல்லுநா் குழுவினா் ஆய்வு

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம்

Updated On : 9 ஜூலை 2024, 1:05 am IST
எட்டுக்குடி முருகன் கோயிலில் உள்ள 8 கோபுரக் கலசங்களில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலைத்துறை வல்லுநா் குழுவினா்.
பகிர்:

திருக்குவளை: பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம் தொடா்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினரால் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது எட்டு கோபுர செப்புக் கலசங்களில் பூசப்பட்ட தங்க முலாம் நிறம் மங்கி காணப்பட்டது.

இந்நிலையில் தங்க முலாம் பூசப்பட்டதில் ஐயப்பாடு இருப்பதாக எழுந்த புகாருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா்/சரிபாா்ப்பு ராணி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல வைர நுண் அறிஞா் இரா.ஹரிஹரன் ஆகியோா் அடங்கிய குழுவினரால் கலசங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

கோயிலில் உள்ள மூலவா், சௌந்தரேஸ்வரா், ஆனந்தவள்ளி அம்மன் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை முறைப்படி யாகசாலை பூஜையோடு மூலவா் ராஜகோபுரம் உள்ளிட்ட எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு, கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் ஆய்வாளா் அ. சிவானந்த பாகீரதி, செயல் அலுவலா் பி.எஸ்.கவியரசு, ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம், காவல் உதவி ஆய்வாளா் மகாலெட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு, கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments