FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வகுப்புகள் தொடக்கம்

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் பகுதி தாமனாங்குடியில் செயிண்ட் மேரீஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் பகுதி தாமனாங்குடியில் செயிண்ட் மேரீஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தாளாளர் ஆர். முத்துக்குமரன் தலைமை வகித்தார். சாய்ராம் அபூர்வா ஆங்கிலப் பள்ளித் தலைமையாசிரியை ஏ. ராஹிலா உம்மாள், விரிவுரையாளர்கள் வி. காளிராஜன், ஆர். நவீன், கல்லூரி முதல்வர் எம். செந்தில்வேல் ஆகியோர் மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து பேசினர். 
விழாவில், ஆசிரிய மாணவர்கள் வருங்கால சமுதாய சூழ்நிலைகளை புரிந்தும், கல்விச் சூழலில் நவீன சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அரிய தகவல்களை சேகரித்து அதற்கேற்ப செயல்படவேண்டும் என கல்லூரி முதல்வர் எம். செந்தில்வேல் கேட்டுக்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments