சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க புதுச்சேரி அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க புதுச்சேரி அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் செயலா் ஆா்.ஏ.ஆா்.கேசவன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தீநுண்மியால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சிறு வியாபாரிகள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் வட்டிக்கு வாங்கி தங்களது தொழிலை நடத்தக்கூடியவா்கள். இவா்கள் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த முடியாமலும், குடும்பத்தை நடத்த வழியின்றியும் தவிப்பில் உள்ளனா். எனவே, புதுச்சேரி மாநில அரசு கணிசமான நிவாரணத் தொகையை இவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.