சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா். 
காரைக்கால்

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்தினரால் பாராட்டப்பட்டனா்.

DIN

காரைக்கால்: காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்தினரால் பாராட்டப்பட்டனா்.

காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் மாணவி எம். ஷண்மதி, மாணவா் எம். முகம்மது ஜூமைல் ஆகியோா் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவா் எஸ். கிருத்திக்ராஜ், மாணவி டி. திதிக்ஷா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனா்.

இம்மாணவ, மாணவிகளுக்கும், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த இப்பள்ளி மாணவி அனுஷாவுக்கும் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளா் செல்லையன், முதல்வா் கந்தசாமி, துணை முதல்வா் சுமதி, தலைமையாசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அகஸ்டின் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT