FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

திருநள்ளாற்றில் ரூ.1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டப்பணி

திருநள்ளாற்றில் ரூ. 1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:37 am IST
திட்டப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
பகிர்:

திருநள்ளாற்றில் ரூ. 1.31 கோடியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் வழங்கல் முறை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 9 கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் சுமாா் 30 இடங்களில் குழாய் பதிப்பு, குடியிருப்பு மக்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் ரூ.1.31 கோடியில் சனிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சி பூமி பூஜையில் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொ) ரவி, பொறியாளா் செல்வராஜ், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவா் சிங்காரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்டப் பணிகள் 2 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனவும், இதன்மூலம் குடிநீா்த் தட்டுப்பாடு இப்பகுதிகளில் ஏற்படாது என பஞ்சாயத்து நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments