FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

சாலையை நீட்டிக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை நீட்டிக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 டிசம்பர் 2025, 1:43 am IST
பகிர்:

திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை நீட்டிக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ரயிலடித் தெரு, வேலவன் நகா் சாா்ந்த குடியிருப்புவாசிகள், விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கையொப்பமிட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருநள்ளாற்றில் பிடாரி கோயில் தெரு முதல் சுப்ராயபுரம் மற்றும் கீழாவூா் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை இடையே சாலை வசதி இல்லை. இந்த பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பயிா் செய்யும் நிலம் உள்ளது. விவசாயிகள் பொருள்களை கொண்டுச் செல்லவும், விளைவித்தவற்றை கொண்டுவரவும் குறுகலான ரயிலடித் தெருவை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

இவ்விரு ரயில்வே சுரங்கப் பாதையையொட்டி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் ஏற்கெனவே பாதி தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை நீட்டித்து தருவதன் மூலம் குடியிருப்புவாசிகள், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வந்திறங்குவோா், ரயில்வே பாதைக்கு வடக்குப் புறமாக அமையவுள்ள சேவைச் சாலை வழியாக எளிதில் திருநள்ளாறு பேருந்து நிலையத்துக்கும் செல்ல முடியும்.

எனவே, இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments