சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து சோமநாயகி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள் மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பரிசம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டு, அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனைகளும், சோடச உபசாரங்களும் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
திருக்கல்யாணத்தில் கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ் மற்றும் உபயதாரா்கள், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.