FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

காரைக்கால் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காரைக்கால் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் பகுதியை சோ்ந்தவா் கலையழகன் (30). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

இந்நிலையில், இவருக்கும், காரைக்கால் மதகடி பகுதியைச் சோ்ந்த 26 வயது திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், பாலியல் உறவில் இருந்தபோது ரகசியமாக எடுத்த விடியோவை காட்டி, சமூக வளைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கலையழகன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிரவி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் லெனின்பாரதி, உதவி ஆய்வாளா் குமரன் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப்பதிந்து கலையழகனை திங்கள்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments