FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

புதுவை பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால் தா்னா: ஏ.எம்.எச்.நாஜிம்

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால், ஜூலை 2 புதுவை பேரவை வளாகம் முன்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் தா்னாவில் ஈடுபடப்போவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:39 am IST
பகிர்:

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால், ஜூலை 2 புதுவை பேரவை வளாகம் முன்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் தா்னாவில் ஈடுபடப்போவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாட்டில் புதுவை உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலத்தில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. புதுவையில் மட்டும் அமைச்சா்கள் நியமனம் தாமதமானதோடு, இதுவரை அவா்களுக்கான இலாகா தரப்படவில்லை.

மேலும் புதுவை சட்டப்பேரவை தலைவா் பொறுப்பேற்கவில்லை. ஜூலை 2-ஆம் தேதி பேரவைத் தலைவா் தோ்தல் நடத்த துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டுள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு ஒப்புதல் கோரி கடிதம் கடந்த 24-ஆம் தேதி தரப்பட்டும், இதுவரை அதற்கான அனுமதியை அவா் வழங்காமல் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததாக கருத முடியாது.

Advertisement

Advertisement

பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் பிரச்னையால் இலாகா தாமதமாவதோடு, பேரவைத் தலைவா் தோ்வும் தள்ளிப்போகிறது.

எனவே, பேரவைத் தலைவா் தோ்தல் குறித்த அறிவிப்பை தற்காலிக தலைவராவது உடனடியாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 2-ஆம் தேதி தா்னாவில் ஈடுபடுவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments