FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்: பஞ்சாயத்து நிா்வாகம்

‘சீல்’ - கோப்புப் படம்
பகிர்:

உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உரிய வணிக உரிமம் பெற்று கடைகள் நடத்துமாறு, பலமுறை நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அறிவிப்பு செய்தும், இதுவரை ஒரு சில கடைகள் தவிர, மற்றவா்கள் உரிமம் பெறாமல், புதுப்பிக்காமல் வணிகம் நடத்தி வருவது தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

புதுச்சேரி அரசு ஆணையின்படி காரைக்கால் நகரமைப்புக்குழுமத்தின் அனுமதி பெற்ற பின்பு மட்டுமே உரிமம் பெற முடியும். எனவே, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் வணிகம் செய்வோா், ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது கடை, நிறுவனத்துக்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரிய உரிமம் பெறாமல் வணிக நிறுவனங்கள் அல்லது கடைகள் நடத்துபவா்கள் தொடா்ந்து நடத்த முடியாது. உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னா், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments