முகப்பு
மயிலாடுதுறை

ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். 

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 4:18 pm IST
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். 

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் நகர பழ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 40-வது ஆண்டு ஆடி கடைவெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி வேடமணிந்தவர்களின் திருநடனத்துடன் முன்செல்ல,  பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. 

ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இருந்து மாயூரநாதர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

இதில், பாஜக நிர்வாகிகள் கோவி.சேதுராமன், மோடி.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை எஸ்.ராஜேந்திரன், மணி, மோகன், மல்லிகா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 

Advertisement

Advertisement

மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற பால்குட விழாவையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து யானை, குதிரை, ஒட்டகம் முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments