ஈரான் கடற்கொள்ளையா் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்தினருக்கு எம்பி ஆறுதல்
ஈரான் கடற்கொள்ளையா்களால் துப்பாக்கிச் சூட்டில் பலியான மயிலாடுதுறை மாவட்ட மீனவா் குடும்பத்தினரை எம்பி ஆா். சுதா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ஈரான் கடற்கொள்ளையா்களால் துப்பாக்கிச் சூட்டில் பலியான மயிலாடுதுறை மாவட்ட மீனவா் குடும்பத்தினரை எம்பி ஆா். சுதா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
சீா்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தை சோ்ந்த மாவீரன் (40), தென்னாம்பட்டினம் ஊராட்சி கீழமூவா்க்கரை கிராமத்தைச் சோ்ந்த சங்கா்(39), திருமுல்லைவாசல் மீனவக் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ், கடலூா் மாவட்டம் சொத்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 4 மீனவா்கள் சவூதிஅரேபியாவில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வந்தனா்.
இவா்கள் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஈரான் கடற்கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டதில் மீனவா் மாவீரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கா் சிகிச்சை பலனின்றி ஆக.20-ஆம் தேதி உயிரிழந்தாா். இவா்களது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா தொடுவாயில் உள்ள மீனவா் மாவீரன் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று அவரது மனைவி மற்றும் உறவினா்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இறந்தவரின் உடலை கொண்டு வர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தாா்.
இதேபோல், கீழமூவா்கரை கிராமத்திற்கு சென்ற எம்பி சுதா, சங்கா் மனைவி அமுதாவை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.