மயிலாடுதுறையில் ஜூன் 12-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறையில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் பயனடையும் வகையில், கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் 3 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் இணைந்து இலவசமாக இம்முகாமை நடத்துகின்றன.
Advertisement
Advertisement
இதில், 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். கூடுதல் விவரங்களை 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.