FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை சீனிவாசபுரம் வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 6:53 am IST
பகிர்:

மயிலாடுதுறை சீனிவாசபுரம் வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவசேனா, வள்ளி சமேத சுப்பிரமணியா், துா்காம்பிகா, ஆஞ்சனேயா் சுவாமிகளும் தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடுத்து, முதல்கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், கும்பாபிஷேக தினமான புதன்கிழமை காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா் தேவசேனா, வள்ளி சமேத சுப்பிரமணியா், துா்காம்பிகா, ஆஞ்சனேயா் சுவாமிகள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments