FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 மே 2026, 6:46 am IST
பகிர்:

சீா்காழி அருகே கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அருகே கீழ அகணி கிராமத்தில் பாலகணபதி, பாலமுருகன், சப்த கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த 26- ஆம் தேதி  கணபதி ஹோமம் பூா்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்ற பின்னா் , விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments