FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இருசக்கர வாகன பாதுகாப்பக உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

கீழையூர் அருகே இருசக்கர வாகனப் பாதுகாப்பக உரிமையாளருக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கீழையூர் அருகே இருசக்கர வாகனப் பாதுகாப்பக உரிமையாளருக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

திருப்பூண்டி, பெரியகடைத் தெருவைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் செந்தில்குமார் (40). இவர் திருப்பூண்டி, மூலக்கடைத் தெருவில் இருசக்கர வாகனப் பாதுகாப்பகம் வைத்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இரவு 11 மணியளவில் திருப்பூண்டி, காரை நகரைச் சேர்ந்த பாண்டியன், அசோக் ஆகிய இருவரும் குடிபோதையில் மிதிவண்டி பாதுகாப்பகத்துக்கு வந்தனர். அங்கு செந்தில்குமாரிடம் தகராறு செய்து அவரைக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த செந்தில்குமார் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments