FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் திருவிளக்குப் பூஜை

திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் ஆதிதிராவிடர் கிராமத்தில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆடி 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:51 am IST
பகிர்:

திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் ஆதிதிராவிடர் கிராமத்தில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. 
நிகழ்ச்சியையொட்டி, பெண்கள் திருவிளக்குகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, குருக்கள் திருவிளக்கு மந்திரங்களை கூற அதை பெண்கள் திரும்பக் கூறி விளக்குக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவைகளால் நைவேத்தியம் செய்யப்பட்டு, அனைத்து விளக்குகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், தஞ்சை மண்டல் விஸ்வ இந்து பரிஷத் செயலர் செந்தில், நாகை மாவட்டச் செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மஞ்சள்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments