கூட்டுறவு சங்கத் தேர்தலில் அமமுகவினர் வெற்றி
கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் தேர்தலில் அமமுகவினர் வெற்றி பெற்றனர்.
கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் தேர்தலில் அமமுகவினர் வெற்றி பெற்றனர்.
செம்பனார்கோயில் அருகேயுள்ள கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இயக்குநர்கள் தேர்தலில், அதிமுக சார்பில் விஸ்வநாதன் தலைமையில் 11பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுப்பிரமணியன் தலைமையில் 10 பேரும் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டது. முடிவில், அமமுகவைச் சேர்ந்த சுப்பிரமணியன், செல்வராஜ், நாகராஜன் உள்ளிட்ட 10 பேரும் இயக்குநர்களாக வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவுத் துறை அலுவலர் நடராஜன் சான்றிதழ்கள் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.