மக்கள் நேர்காணல் முகாம்
வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட சார் ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்ற முகாமில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உழவர் பாதுகாப்பு உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இறப்பு உதவித் தொகை, பட்டாமாறுதல் உள்பட 64 பயனாளிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில், வேதாரண்யம் வட்டாட்சியர் ஸ்ரீதர், நெய்விளக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நெய்விளக்கு வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கஸ்தூரி, தோட்டக்கலைத் துறை செல்வராஜ், , சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டவழங்கல் அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.