மின்சாரம் பாய்ந்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.
மாமங்குடி ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (55). பி.எஸ்.என்.எல். நிறுவன ஒப்பந்த ஊழியரான இவர், சனிக்கிழமை தனது வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு தேநீர் வாங்கச் சென்றபோது, மின்கம்பி அறுந்து இவர் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பக்கிரிசாமி உயிரிழந்தார். பொறையாறு போலீஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.