மயிலாடுதுறை: மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.