முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள் பிரச்னைகளில் திமுக அரசுக்கு அக்கறையில்லை: முன்னாள் அமைச்சா் ஓ. எஸ். மணியன் பேச்சு

மக்கள் பிரச்னைகளில் திமுக அரசுக்கு அக்கறையில்லை என்றாா் நாகை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன்.

Updated On : 17 டிசம்பர் 2021, 11:00 pm IST
பகிர்:

மக்கள் பிரச்னைகளில் திமுக அரசுக்கு அக்கறையில்லை என்றாா் நாகை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன்.

தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வினா், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

Advertisement

Advertisement

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசுக் குறைந்துள்ளது. ஆனால், மாநில அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்கவில்லை. பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 1, 000 வழங்கப்படும் என்று கூறினா். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா், தற்போது மௌனம் காப்பது ஏன் என்றாா் ஓ.எஸ். மணியன்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக மாநில அரசு குறைக்கவேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும், பொதுமக்களின் நலனுக்காக திறக்கப்பட்ட அம்மா மருத்துவமனைகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக நாகை மாவட்ட அவைத் தலைவா்ஆா். ஜீவானந்தம் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி முன்னிலை வகித்தாா்.

முன்னாள்அமைச்சா் கே. ஏ. ஜெயபால் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவாக அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments