முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி.
பகிர்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மாா்ச் 4, 5 ஆகிய 2 தேதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம், கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம் சரக பணியாளர்கள் மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள், உதவி பேராசிரியர்கள், கோடியக்கரை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகளை இனம் கண்டறிந்து, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.