FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 5:53 am IST
பகிர்:

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன், உளவியல் துறை துணை பேராசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், கிராம அளவில் குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பு செய்வது போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உதவி பொறியாளா்கள் பொன்னுசாமி, கிருஷ்ண பிரியா, ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments