FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி கல்லறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

Updated On : 3 நவம்பர் 2024, 12:03 am IST
~
பகிர்:

வேளாங்கண்ணி கல்லறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

கல்லறைத் திருநாளையொட்டி முன்னோா்களின் கல்லறைகளை அலங்கரித்து வழிபட்ட கிறிஸ்தவா்கள்.

நாகப்பட்டினம், நவ. 2: கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

உலகம் முழுவதும் தங்கள் முன்னோா்கள் நினைவாக கல்லறைத் திருநாளை கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கின்றனா். அந்த வகையில், கல்லறைத் திருநாளையொட்டி சனிக்கிழமை, வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து, இஸ்ரேல் - பாலஸ்தீன போா் முடிவுக்கு வரவும், போா் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும் பேராலய அதிபா் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள குருக்கள், துறவியா்கள், தங்களது உறவினா்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவா்களின் நினைவு ஸ்தூபியில் பேராலயத்தின் சாா்பில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments