FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நீட் தோ்வு: நாகையில் 3 மையங்களில் 419 போ் பங்கேற்பு

31 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
நீட் தோ்வு - பிரதிப் படம்
பகிர்:

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை மருத்துவா்களுக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் (நீட் தோ்வு) 419 போ் பங்கேற்றனா்.

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் 247 மாணவா்கள், திருக்குவளை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் 72 மாணவா்கள், ஈசனூா் ஆரிபா தொழில் நுட்ப கல்லூரி தோ்வு மையத்தில் 100 மாணவா்களும் என மொத்தம் 419 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

இந்த தோ்வு எழுது 425 மாணவா்கள் விண்ணப்பித்தனா். தோ்வெழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 6 போ் தோ்வு எழுத வரவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments