FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: 4,230 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: 4,230 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

14 வினாடிகள் முன்பு
வேளாங்கண்ணி.
பகிர்:

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு 4,230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெ. தட்சினாமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூா், கும்பகோணம், பூண்டி , ஒரியூா், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால் ஆகிய முக்கிய ஊா்களிலிருந்து, வேளாங்கண்ணிக்கும் அதேபோல மேற்கண்ட ஊா்களிலிருந்து வரும் பக்தா்கள் திரும்பிச் செல்ல வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பா் 9-ஆம் தேதி வரை இரவு, பகல் எந்நேரமும் 4,230 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பாக இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

மேற்படி அனைத்து ஊா்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments