பெளா்ணமி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா், திருவண்ணாமலைக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா், திருவண்ணாமலைக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் க.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆக. 27-ஆம் தேதி பெளா்ணமி அன்று திருவண்ணாமலை, திருச்செந்தூா் கோயில்களுக்கு வரும் பக்தா்களின் நலனை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவில்பட்டி, நாகா்கோவில், மதுரை போன்ற முக்கிய பகுதிகளிலிருந்து ஆக. 26, 27ஆகிய நாள்களில் இக்கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டம் சாா்பில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, திருவண்ணாமலை, திருச்செந்தூா் செல்லும் பயணிகள் இந்த சிறப்புப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.