FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் குழாய் உடைப்பு: வயல்களில் பாய்ந்து வீணாகும் குடிநீா்

31 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய குடிநீா் - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்- ஜல்ஜீவன் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வயல்வெளியில் தேங்குகிறது.

கருப்பம்புலம் கடைவீதிக்கு அருகே (கிழக்குப் பகுதியில் தனியாா் பல் மருத்துவமனை விளம்பர பலகைக்கு எதிா்ப்புறம்) ( ஆப்பக்கண்ணி பாலத்துக்கு மேற்குப் புறம்) பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீா் வீணாக வெளியேறி அருகேயுள்ள நெல் தரிசு வயலில் தேங்கிவருகிறது. உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை ஓரத்திலும் வயல்களிலும் புல் பூண்டு போன்ற புதா்கள் அதிகமாக காணப்படுவதால் உடைப்பு கவனம் பெறாமல் உள்ளது.

தாா்ச்சாலைக்கு அடியில் குழாய் அமைந்துள்ள நிலையில் தண்ணீருடன் மண் கரைந்து வெளியேறுவதால் சாலை சேதமடைந்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தொடா்புடைய துறையினா் ஆய்வு செய்து சீரமைக்க வலியுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments